முதல் முறையாக தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் அபிஷேக் பச்சன். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அந்த நிகழ்ச்சி நேஷனல் பிங்கோ நைட்.

ஜனவ*ரி 23 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மொத்தம் 13 எபிசோடுகள் ஒளிபரப்பாக உள்ளது. இதன் டிஆர்பி ரேட்டிங் 5.1. அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், அ*க்சய் குமார், ஷில்பா ஷெட்டி போன்ற பாலிவுட் பிரபலங்களின் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை விட இது அதிகம்.

“நடிப்பதைவிட ஆங்க*ரிங் செய்வது சுலபமாக இருக்கிறது. தொலைக்காட்சி என்பது நமது ரசிகர்களுடன் கலந்துரையாட கிடைக்கிற இன்னொரு பிளாட்ஃபார்ம். அதை எல்லோரும் பயன்படுத்த வேண்டும்” என தனது தொலைக்காட்சி பிரவேசம் பற்றி பேட்டியளித்துள்ளார் அபிஷேக்.

அதே நேரம் நிகழ்ச்சி செம போர் என ரசிகர்களிடமிருந்து அதிருப்தியும் கிளம்பியிருக்கிறது. அபிஷேக் தனது நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்வாரா என்பது இனி வரும் நாட்களில் தெ*ரியும்.