சர்வதேச நடனப் பள்ளியை தொடங்குகிறார் பிரபுதேவா. இதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகின்றன.

நடனப் பள்ளி அமைக்க வேண்டும் என்பது பிரபுதேவாவின் நீண்டநாள் கனவு. அதற்கான நேரம் இப்போது தகைந்திருக்கிறது. தனது நடனப் பள்ளிக்கு நவரசா என்று பெயர் வைத்திருக்கிறார் பிரபுதேவா.

பெங்களூரு, மலேசியா, கல்போர்னியா ஆகிய இடங்களில் முதல்கட்டமாக பள்ளிகள் தொடங்க திட்டமிட்டிருக்கிறார். அனைத்து வகை நடனங்களும் கற்றுத்தரப்படும் பள்ளியாக இவை இருக்கும் என்கிறார்கள்.